'கொழும்பு திருகோணமலை பொருளாதார வழி' என்ற திட்டத்திற்கு ஆலோசனை வழங்க கொரிய எக்சிம் வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் இணக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம் ஒன்று அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து முழு அறிக்கை தற்போது ஆசிய அபிவிருத்தி வங்கியினால், இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர இந்த திட்டம் குறித்து புரிந்துணர்வு ஒன்றை ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கொண்று சம்பவந்தப்பட்ட அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டன.
இந்த அபிவிருத்தி திட்டத்திற்கு தனியார் நிறுவனங்களையும் உள்வாங்குவதுடன் பல நன்மைகளையும் பெற்று கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டம் நிறைவடைந்தன் பின்னர் எக்சிம் வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் தலைசிறந்த நிபுணர்களின் ஆலோசனைகளுடன் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.