முதலீடுகளை கவரும் நோக்கில் பிரத்தியேகமான செயலகம் ஒன்றை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலீடு சார்ந்த முகவர்களுடன் ஒத்துழைத்து நாட்டுக்கான முதலீடுகளை அதிகரிப்பது இந்த செயலகத்தின் நோக்கமாக இருக்கும்.
முதலீடுகளை அதிகரிக்கும் அரசாங்கத்தின் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களில் இதுவும் ஒன்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதலீடுகள் சார்ந்த முகவர்களுடன் தொடர்புகளை பேணுவதற்காக மேலும் 10 செயற்படைகள் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச வர்த்தக மற்றும் அபிவிருத்தி மூலோபாய அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.