கொழும்பு பங்குச் சந்தையின் பொறுப்பினை ஏற்றுள்ள புதிய தலைவர் ரே அபயவர்தன, கொழும்பு பங்குச் சந்தையின் பரிவர்தனை நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் பங்குச் சந்தையின் பொறுப்பினை ஏற்றுள்ள அவர், வருதொகைக்களுக்குத் தக்க கழிவு நீக்கி உடனடித் தொகையாக மாற்றுதல் முறைமைக்கு முக்கியத்துவம் கொடுக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.
இதன் மூலம் கொழும்பு பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதுடன் தகுதி வாய்ந்த பொருத்தமான முறையில் முதலீட்டை மேம்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, கொழும்பு பங்குச் சந்தையால் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடு பரப்புரை நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.