இலங்கையில் உற்பத்தியாகின்ற தேயிலை, ஏற்றுமதி முறையற்றவிதத்தில் இருக்கின்றமையானது, இந்தியாவின் தேயிலை உற்பத்திக்கு அனுகூலமாக அமைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
த எக்கனமிக்ஸ்டைம்ஸ் என்ற இந்தியஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை உள்ளிட்ட நிலைமைகளால் தேயிலை ஏற்றுமதியில் தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சர்வதேச சந்தையில் இந்தியாவின் தேயிலைக்கான கேள்வி அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 5.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஆனால் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.