எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கை பொதியிடல் கல்வியகம் மற்றும் அதன் 'தொழில்நுட்ப பிரிவு' என அழைக்கப்படும் பொதியிடல் அபிவிருத்தி நிலையம் என்பன இணைந்து சர்வதேச பொதியிடல் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வுக்கு முன்னதாக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி குறிந்த இடத்தில் சர்வதேச பொதி தொடர்பான மாநாடு ஒன்றும் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் சர்வதேச ரீதியாக துறைசார் ரீதியாக பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன்போது பொதியிடல் தொர்பிலும் அச்சிடல் தொடர்பிலும் நிபுணத்துவ அலோசனைகள் வழங்கப்படும்.
இதேவேளை 1975ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை பொதியிடல் கல்வியகம் தென் மற்றும் தென்கிழக்காசிய பிராந்தியத்தில் காணப்படும் பொதியிடல் துறையின் பழமையான துறைசார் சம்மேளனமாக நிகழ்வது குறிப்பிடத்தக்கது.