மலேசியாவில் சட்டவிரோதமாக பணியாற்றி வருகின்ற இலங்கையர்கள் தங்களை சட்டரீதியான பணியாளர்களாக பதிவு செய்துக் கொள்வதற்கான கால அவகாசம் இன்னும் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் உள்துறை அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
தற்போது மலேசியாவில் 5 ஆயிரத்து 964 இலங்கையர்கள் சட்டரீதியாக தொழில்புரிந்து வருகின்ற போதும், மேலும் ஆயிரக் கணக்கானவர்கள் சட்டவிரோதமாக தொழில்புரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர்களை சட்டரீதியாக பதிவு செய்வதற்கான காலம் இந்த வருடம் டிசம்பர் மாதம் வரையில் தொடருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.