மிளகு விலை குறைவினால் பாதிக்கப்படும் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் வருமான வழியினை பாதுகாக்கும் நோக்கில் அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிக்கப்படவுள்ளது.
சர்வதேச சந்தை மற்றும் தேசிய சந்தையில் மிளகு விலை அன்றாடம் குறைவடைவதனாலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த குழுவிற்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமைதாங்குகிறார்.
இந்த உபகுழுவானது மிளகு விலை குறைவினால் பாதிப்படைபவர்கள் தொடர்பில் பரிசீலித்து அமைச்சரவைக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளது.