ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தர உயர்வுக்கான வேலைத்திட்டத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதியளித்துள்ளது.
இதற்காக 5.4 பில்லியன் ரூபாய்கள் வழங்கப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவத்துள்ளது.
ஏழ்மையுடன் மிகவும் பின்தங்கியுள்ள சமுகங்களின் வாழ்வாதார உயர்ச்சிக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
இதன்கீழ் மொனராகலை, பதுளை, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.