2017ம் ஆண்டுக்கான மிளகு உற்பத்தி மாநாட்டை கண்டியில் நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் 30ம் திகதி முதல் நவம்பர் மாதம் 2ம் திகதி வரையில் இந்த மாநாடு நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இலங்கை, இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, வியட்னாம் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த மாநாட்டின் ஊடாக இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மிளகிற்கு புதிய சர்வதேச சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.