அரிசித் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு 5 லட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், பண்டிகைக் காலத்தில் 500 விசேட பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
லங்கா சதொசவில் எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 வரை இந்த விலைக்கழிவு அமுலில் இருக்கும் என அமைச்சர் கூறியதாக அவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சதொசவில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 65 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த நிலையில், தேங்காய் அதிகளவில் கிடைத்தால், நாடுமுழுவதும் அதனை விநியோகிக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார
கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், பண்டிகைக் காலத்தில் 500 விசேட பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
லங்கா சதொசவில் எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 வரை இந்த விலைக்கழிவு அமுலில் இருக்கும் என அமைச்சர் கூறியதாக அவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சதொசவில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 65 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த நிலையில், தேங்காய் அதிகளவில் கிடைத்தால், நாடுமுழுவதும் அதனை விநியோகிக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார