கொடுப்பனவுடனான தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதில் பெண்களுக்கு இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும் என்று உலக வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையின் தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பு 2010ம் ஆண்டு 41 சதவீதமாக இருந்தது.
எனினும் அது கடந்த 2016ம் ஆண்டு 36 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்தநிலையில் பெண்களுக்கு நிலவும் தடைகளை நீக்குவதன் ஊடாக, இலங்கையில் தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க முடியும் என்றும், உலக வங்கி தமது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.