இயற்கை உரத்தை பயன்படுத்தி தேசிய பாரம்பரிய நெல் உற்பத்தியை மேற்கொள்ளும் விவசாயிகளின் உற்பத்திக்கு காப்புறுதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விவசாய காப்புறுதிச் சபை இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக, விவசாயிகளுக்கு தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கை இந்த முறை பெரும்போகம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இத்தகைய நெல் உற்பத்திகளில் ஆர்வம் கொண்ட விவசாயிகளுக்குத் தேவையான விதை நெல் மத்திய நிலையங்கள் ஊடாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.