தேயிலை உற்பத்தித் துறையை அபிவிருத்தி செய்ய தனியார் மற்றும் அரச துறைகளுக்கு இடையில் ஒத்துழைப்பு அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொரியாவுக்குச் சென்றிருந்த போது விசேட பொருளாதார மாநாடுகளின் கலந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது.
அந்த நாட்டு பொருளாதார நிபுணர்களுடனான கலந்துரையாடல்களின் போது இலங்கையின் தேயிலை றப்பர் உற்பத்திகள் தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட்டது.
எனினும் அவர்கள் இலங்கையின் தேயிலை றப்பர் உற்பத்திகள் குறித்து போதிய தெளிவினை பெற்றிருக்க வில்லை.
இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரும் பொறுப்பு கூறவேண்டும்.
வெளிவிவகார தூதரகங்கள் மற்றும் பொருளாதார ஆணையாளர்கள் முக்கியமாக பொறுப்பு கூறவேண்டும்.
இதேவேளை, சாதகமற்ற காலநிலையினால் அரசாங்கம் எதிர்ப்பார்த்த பொருளாதார மற்றும் உற்பத்தி வேகத்தை அடைய முடியாதுபோயுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதனால் அரிசி மற்றும் தேங்காயை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.