நுவரெலியாவிற்கு வருகைத் தரும் ஏப்ரல் பருவ சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் விடுதி உரிமையாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
கண்டியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளே இதற்கான காரணம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது நுவரெலியாவிற்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 40 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.