சுங்கவரி தவிர்ந்த ஏனைய வரிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்றைய நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய 3 ஆயிரத்திற்கும் அதிகமான மேலதிக வரிகள் அகற்றப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஆயிரத்து இருநூறு பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், மறைமுக வரியை 60 வீதமாக குறைத்து நேரடி வரியை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.