எதிர்வரும் இரண்டு தேயிலை ஏலச் சந்தையில் அதிகப்படியான தேயிலையை விற்பனை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாதம் 28ம் மற்றும் 30ம் திகதிகளிலும் ஜுன் மாதம் 5ம் மற்றும் 6ம் திகதிகளிலும், தேயிலைக்கான ஏலச்சந்தை நடைபெறவுள்ளது.
இதன்போது இந்த மாதம் 7.9 மில்லியன் கிலோகிராம் தேயிலையும், அடுத்த மாதம் 8 மில்லியன் தேயிலையும் விற்பனை செய்ய எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்த மாதம் அதிகளவான தேயிலை உற்பத்தி இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.