தேயிலைக்கான சர்வதேச விருதொன்று இலங்கைக்கு

Tuesday, 12 June 2018 - 19:24

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
தீங்கு விளைவிக்காத கார்பன் உரத்தை குறைந்த அளவில் பயன்படுத்தி உற்பத்திசெய்யப்பட்ட தேயிலைக்கான சர்வதேச விருதினை இலங்கையின் தேயிலை உற்பத்தி நிறுவனம் ஒன்று பெற்றுள்ளது.

Ecovia Intelligence என்ற அமைப்பினால் வழங்கப்படுகின்ற நிலையான முதன்மை உணவு விருது வழங்கலில் இலங்கை நிறுவனமொன்று இந்த விருதினை பெற்றுள்ளது.

நிலைத்து நிற்கக்கூடிய உணவு உற்பத்தித்துறைக்கு உதவுகின்றவர்களுக்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

சுற்றுச் சூழலுக்கு தாக்கத்தை மிகக் குறைந்த அறவில் ஏற்படுத்துகின்ற வகையில் இலங்கையில் இருந்து ஐரோப்பவில் சந்தைப்படுத்தப்படுகின்ற முதலாவது இலங்கைத் தேயிலை அங்கிகாரத்தை குறித்த தேயிலை உற்பத்தி நிறுவனம் பெற்றுள்ளது. 







Exclusive Clips