அரசாங்கம் தேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்துவதுடன் அவற்றை பாதுகாப்பதற்கு பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய கைத்தொழில்துறையை பலப்படுத்தி சர்வதேச சந்தைக்கு அதனை முன்னெடுப்பதே தமது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தேசிய கைத்தொழிலாளர்களுக்கு உபகரணங்கள் இறக்குமதி செய்யும் போதும் அறவிடப்படும் 'வற் வரியை நீக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, புதிய கைத்தொழில் துறையைச்சார்ந்தோருக்கு வரி நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.