காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள நிலப்பரப்பில், சுற்றாடலுக்கு உகந்த பொருந்தமான கைத்தொழில் பேட்டை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள, 330 ஏக்கர் காணி தற்பொழுது தயாரிப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படாதுள்ளது.
இந்தநிலையில், குறித்த நிலப்பரப்பில் கைத்தொழில் பேட்டை ஒன்றை அமைப்பதற்காக 100 ஏக்கர் காணி எதிர்வரும் 2019ஆம் ஆண்டுக்குள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
அதற்கான உரிய முதலீட்டாளர்களை தெரிவு செய்வதற்காக, கைத்தொழில் மற்றும் வர்த்த அலுவல்கள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் சமர்ப்பித்த அமைச்சரவை யோசனைக்கு அனுமதி கிடைத்துள்ளது.