கடந்த நான்கு மாத காலப்பகுதியில் விவசாய நல செயற்திட்டங்களுக்காக 600 மில்லியன் ரூபா வரையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வட மாகாணத்தில் விசேடமாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
40 சதவீதம் விவசாய செய்கையாளர்களாக இருந்தும் பின்தங்கிய நிலையில் இருக்கும் விவசாயிகளை ஏனைய மாவட்டங்களை போன்று முன்னோக்கி கொண்டு செல்வதற்காக துரித விவசாய மீள் எழுச்சித்திட்டம முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, புகையிலை செய்கையாளர்கள் தங்களது செய்கைகளை தொடரவும், மாற்று பயிர்களை அறிமுகப்படுத்தும்வரையில் உற்பத்தி நடவடிக்கைகளை குறைத்துக் மேற்கொள்ளுமாறும் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.