கிளிநொச்சி அக்கராயன்குளத்தின் கீழ் இந்த வருடம் 2 ஆயிரத்து 790 ஏக்கர் காணியில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படும் என நேற்று இடம்பெற்ற சிறுபோக குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்திருந்த கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.சத்தியசீலன் இதனை தெரிவித்துள்ளார்.
பயிர்ச் செய்கையில் விவசாயிகள் நடைமுறை ஒழுங்குகளை இறுக்கமாகக் கடைப்பிடிப்பது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த இரு ஆண்டுகளாக கிளிநொச்சி மாவட்டம் வறட்சியான சூழலை எதிர்கொண்டதில், பயிர்ச் செய்கைகள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டன.
இந்தநிலையில் தற்போது குளங்களின் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகின்றமையினால், நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி சிறந்த முறையில் சிறுபோக நெற்செய்கையினை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்திருந்த கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.சத்தியசீலன் இதனை தெரிவித்துள்ளார்.
பயிர்ச் செய்கையில் விவசாயிகள் நடைமுறை ஒழுங்குகளை இறுக்கமாகக் கடைப்பிடிப்பது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த இரு ஆண்டுகளாக கிளிநொச்சி மாவட்டம் வறட்சியான சூழலை எதிர்கொண்டதில், பயிர்ச் செய்கைகள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டன.
இந்தநிலையில் தற்போது குளங்களின் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகின்றமையினால், நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி சிறந்த முறையில் சிறுபோக நெற்செய்கையினை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.