கண்டி மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக, உலக வங்கி நிதியுதவி அளித்துள்ளது.
இதற்கமைய உலக வங்கி 11 பில்லியன் ரூபாவினை வழங்க முன்வந்துள்ளதாக, பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் அந்த மாவட்டத்தின் வீதிகள், பொது போக்குவரத்துக்கள் உள்ளிட்ட அனைத்தும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்துள்ள கண்டி மாவட்டத்தில் போக்குவரத்து திட்டங்களை அபிவிருத்தி செய்வதன் அவசியம் குறித்தும் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.