இரத்தினபுரி மாவட்டத்தின் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட உருவாக்கத்துக்காக சவுதி அரேபிய அரசாங்கம் கடன் உதவி வழங்கவுள்ளது.
நிதி அமைச்சின் ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது.
சகல வசதிகளையும் கொண்ட மருத்துவபீடத்தை அமைப்பதற்காக சவுதி அரசாங்கம் 185.7 மில்லியன் சவுதி ரியால்களை கடனாக வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.