பழவகை உற்பத்தி கிராமங்களை ஆரம்பிக்கும் வேலைத் திட்டமொன்று தென்மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காலி மாவட்டத்தின் 14 கிராமங்களில் இந்த பயிர்ச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி மாம்பழம், தூரீயன், தோடை போன்ற பழவகைகள் இந்த கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ளளன.
இந்த பழ உற்பத்தியாளர்களுக்கான ஆலோசனை மற்றும் பழமரக்கன்றுகள் விவசாயத் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்றன.