இந்தமுறை 70 ஆயிரம் ஏக்கர்களில் சோளத்தினை பயிர் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் படைப்புழுக்களால் சோளத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக சோளத்தின் விலை அதிகரித்தது.
இந்த நிலையில் சோளத்திற்கு தற்போது நாட்டில் கேள்வி அதிகரித்துள்ளதாகவும் அதனால் அதிகளவில் சோளத்தினை பயிரிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.