Monday, 18 November 2019 - 15:35
மத்திய வங்கி தெரிவித்துள்ள விடயம்..
கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் தயாரிப்பு மற்றும் கொள்வனவு முகாமையாளர் விலைச்சுட்டெண் ஒக்டோபர் மாதத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விலைச்சுட்டெண்ணானது கடந்த ஒக்டோபர் மாதத்தில் 57.6 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சந்தைகளில் நிலவும் கேள்வி அதிகரிப்பே இதற்கான காரணம் என குறிப்பிடப்படுகிறது.
எதிர்வரும் பண்டிகை காலத்தில் குடிபாணங்கள் மற்றும் ஆடைகள் கைத்தொழி;;ற்துறையில் இந்த அதிகரிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.