பெரும்போக நெல் கொள்வனவு அடுத்த வாரம் ஆரம்பமாகவிருப்பதாக நெல் சந்தைப்படுத்தும் சபை அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அரசாங்கத்தின் நிர்ணய விலையில் நெல் கொள்வனவு செய்யும் பணி முதலில் ஆரம்பிக்கப்படும் என நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் ஜெ.டி.மானப்பெரும தெரிவித்துள்ளார்.
பின்னர் அறுவடைக்கு ஏற்ற வகையில் ஏனைய மாவட்டங்களிலும் நெல் கொள்வனவை மேற்கொள்ள தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொள்வனவு செய்யப்படும் நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கு அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தாமதமின்றி விவசாயிகளுக்கு பணம் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டள்ளதாகவும் நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் ஜெ.டி.மானப்பெரும தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அரசாங்கத்தின் நிர்ணய விலையில் நெல் கொள்வனவு செய்யும் பணி முதலில் ஆரம்பிக்கப்படும் என நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் ஜெ.டி.மானப்பெரும தெரிவித்துள்ளார்.
பின்னர் அறுவடைக்கு ஏற்ற வகையில் ஏனைய மாவட்டங்களிலும் நெல் கொள்வனவை மேற்கொள்ள தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொள்வனவு செய்யப்படும் நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கு அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தாமதமின்றி விவசாயிகளுக்கு பணம் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டள்ளதாகவும் நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் ஜெ.டி.மானப்பெரும தெரிவித்துள்ளார்.