தன்னை களங்கப்படுத்தவும் , படிக்க விடாமல் தடுக்கவும் சதி நடப்பதாகவும் அதற்காகவே அவரது முகத்தை தொழில்நுட்பம் மூலம் மாற்றி ஆபாச காணொளியை இணையத்தில் வெளியிட்டுள்ளதாக நடிகை லக்ஷ்மி மேனன் தெரிவித்துள்ளார்.
லக்ஷ்மி மேனன் பெயரில் ஆபாச காணொளிகள் சில இணைய தளங்களிலும், வட்ஸ்எப் குழுக்களிலும் சமீபத்தில் பரவியது.
இதனால் திரைப்பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. காணொளியில் இருப்பது லட்சுமிமேனன்தான் என சிலர் கற்பூரம் அடிக்காத குறையாகக் கூறிவந்தனர். சிலர் போலிப் படம் என்றனர்.
இப்போது இது குறித்து லட்சுமிமேனன் வாய் திறந்துள்ளார். "அந்த ஆபாச வீடியோ படத்தில் இருப்பது நான் அல்ல. யாரோ என்னை களப்படுத்துவதற்காக திட்டமிட்டு இந்த படத்தை வெளியிட்டுள்ளனர்.
அந்த ஆபாச காணொளி இருக்கும் பெண்ணின் முகத்துக்கும் என் முகத்துக்கும் சம்மந்தமே இல்லை. அந்த காணொளி உண்மையானது இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.
நான் இப்போது பிளஸ்டூ தேர்வுக்காக படித்துக் கொண்டு இருக்கிறேன். என்னை படிக்கவிடாமல் செய்யவும், கவனத்தை திசை திருப்பவும் இந்த சதி செயல் செய்யப்பட்டு இருக்கலாம் என நினைக்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.