மும்பையின் பந்ரா பகுதியில் உள்ள இரவு விடுதியொன்றுக்கு சென்றுள்ளார் பொலிவுட் நட்சத்திரம் சல்மான் கான்.
அவரிடம் வந்த 4 பெண்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டுள்ளனர்.
இதனையடுத்து அவர்களிடம் கொஞ்சம் நேரம் பேசியுள்ளார் சல்மான்.
பின்னர் அப்பெண்கள் அவ்விட த்தை விட்டுச் சென்றுள்ளனர்.
சிறிது நேரத்தில் அவர்கள் அவ்விடத்தை விட்டுச் சென்றதும் மேசை மீது தான் வைத்த உடமைகளை பரிசோதித்துள்ளார் சல்மான்.
அதன்போதே அவரது பணப்பை , 'பெண்டன்' மற்றும் கண்ணாடி திருடப்பட்டுள்ளதை சல்மான் அவதானித்துள்ளார்.
பின்னர் அவரது பாதுகாவலர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்யும் படி சல்மானை வலியுறுத்தியுள்ள போதிலும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நான்கு பெண்கள் சல்மானையே ஏமாற்றியமை பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.