பரத், சந்தியா மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் காதல். பலரையும் கவர்ந்து வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தால் அனைவரையும் சிரிக்க வைத்த நகைச்சுவை நடிகர் பல்லு பாபு.
இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் இவர், நடிச்சா ஹீரோ தான், அப்புறம் அரசியல், CM, PM அப்படினு வசனம் பேசி அசத்தி இருப்பாரு. இதை பார்த்து சிரிக்காதவங்களே இருக்க முடியாது.
இந்த நகைச்சுவை நடிகர் இப்போ பிச்சை எடுத்துட்டு இருப்பதாக தகவல் வந்தது.
அதனாலே அவரை தேடி கண்டு பிடிச்ச போது அவர் ஒரு கோவில் வாசலில் பிச்சை எடுத்துட்டு இருந்தது அனைவரையும் வேதனைக்கு உள்ளாக்கியது.
பிறகு அவரிடம் விசாரித்த போது காதல் படத்துல நடிச்சிருப்பேன்.
அப்புறம் என் அம்மா அப்பா இறந்துட்டதால வேற எந்த படத்துக்கும் முயற்சி பண்ணாம இங்கேயே இருந்துட்டேன் என வேதனையுடன் கூறினார்.