தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருபவர் பிரியா ஆனந்த், இவர் தற்போது கூட்டத்தில் ஒருத்தன் படத்தில் நடித்துள்ளார்.
சினிமாவில் ஏற்ற இடம் கிடைக்காததால் சினிமாவை விட்டே விலக முடிவு செய்திருந்தேன் என கூட்டத்தில் ஒருத்தன் பட செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
மேலும் விலகலாம் என முடிவு செய்ததால் வந்த வாய்ப்புகள் அனைத்தையும் தவிர்த்து விட்டேன், ஆனால் இந்த படத்தின் கதையில் நல்ல விசயங்கள் நிறைய இருப்பதால் உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன் எனவும் கூறியுள்ளார்.
நான் இப்பட கதையை கேட்ட பிறகு இவ்வளவு அழுத்தமான கருத்து இருக்கிறதே இப்படத்தில் நடித்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்து நடித்ததாக கூறியுள்ளார்.