மக்கள் மத்தியில் அதிகம் பரப்பப்பட்ட டிவி நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி அமைந்துவிட்டது.
ஹிந்தியில் 11 வது சீசன் அண்மையில் நடந்து முடிந்தது. இதனை பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தொகுத்து வழங்கினார்.
இதில் இறுதியில் வந்த 4 போட்டியாளர்களில் ஒருவரான ஷில்பா ஷிண்டே வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இதற்கான விருது அவருக்கு வழங்கப்பட்டது. பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
பிரபல நடிகையான இவர் சில சீரியல்களில் நடித்துள்ளார். இனி சீரியல்களில் நடிக்கமாட்டேன். சினிமாவில் தான் கவனம் செலுத்துவேன் என கூறினார். அவருக்கு பரிசுத்தொகையாக ரூ 45 லட்சம் கொடுக்கப்பட்டதாம்.