சிம்பு தற்போது தான் அனைத்து பிரச்சனைகளிலும் இருந்து வெளியே வந்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார். இந்நிலையில் AAA படப்பிடிப்பில் சிம்பு சரியாக நடந்துக்கொள்ளவில்லை என அப்படத்தின் தயாரிப்பாளர் கூறினார்.
இதற்காக தனி பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்தினார், அதில் ஆதிக் ரவிச்சந்திரனும் கலந்துக்கொண்டார், அவரும் சிம்பு மீது பல குற்றங்களை அடுக்கினார்.
இந்நிலையில் தற்போது சிம்பு-ஆதிக் பேசிய தொலைபேசி உரையாடல் கசிந்துள்ளது, இதில் ஆதிக்கை சிம்பு வெளுத்து வாங்கியுள்ளார்.
இதில் ‘மைக்கல் ராயப்பன் ஒரு படம் கொடுக்கின்றேன் என்று சொன்னதற்காக என்னை பற்றி தவறாக பேசினாயே, நீ ஒரு ஆம்பளையா இருந்தா, நீ எதிர்த்து தானே பேசியிருக்க வேண்டும்.
என்னை பற்றி உனக்கு எவ்வளவு தெரியும், நீயே இப்படி நடந்துக்கொள்ளலாமா’ என்று பேசியுள்ளார், இதோ முழு குரல் பதிவு.