தமிழ் சினிமாவில் 90களில் முகம் தெரிந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை விந்தியா. பின் ஜெயலலிதாவின் கட்சியில் சேர்ந்து சூறாவளி பேச்சாளரானார். எள்ளளவும் பயமில்லாமல் எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.
அவரின் பேச்சை கேட்டு ஜெயலலிதாவே அவரை கூப்பிட்டு பாராட்டியதாக சொல்வதுண்டு. ஜெயலலிதா இறந்ததும் அதிகாரம் மாற, கூவத்தூர் விசயங்கள் பிடிக்காமல் போக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
தற்போதைய முதலமைச்சருக்கு இப்போது கடிதம் எழுதியுள்ளாராம். இதில் முதலில் என்னை மன்னித்து விடுங்கள் என குறிப்பிட்டுள்ளாராம். முதலமைச்சரை புகழ்ந்து எழுதியதோடு வாழ்த்துக்கள் என கூறியதோடு அன்புத் தொண்டர்களில் நானும் ஒருத்தி என குறிப்பிட்டுள்ளாராம்.