இசையுலகில் இரண்டு ஒஸ்கர் விருதுகளை பெற்று எல்லா புகழும் இறைவனுக்கே என்று தமிழில் கூறி தமிழ் மொழிக்கு உலகளவில் பெருமை சேர்த்த இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் புதிய முயற்சியில் களமிறங்கியுள்ளார்.
'முதன்முறையாக தான் தயாரிப்பாளராகவும், கதையாசிரியராகவும் தோற்றமெடுத்து ஒரு இசையை ஆன்மாவாக கொண்ட முற்றுமுழுதாக காதல் கதையாக அமையவுள்ள உணர்வுமிக்க படத்தை தயாரிக்கவுள்ளேன்.
தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான YM Movies மூலம்தயாரித்து இயக்கவுள்ள ‘99 Songs’ திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து வௌியிடவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
‘99 Songs’ திரைப்படம் உலகளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த வருடம் ஜூன் 21 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
ரசிகர்களாகிய நீங்கள் இதுவரை பொழிந்த அன்புக்கும், ஆதரவுக்கும், ஊக்கத்திற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்' எனவும் ஏ ஆர் ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
'முதன்முறையாக தான் தயாரிப்பாளராகவும், கதையாசிரியராகவும் தோற்றமெடுத்து ஒரு இசையை ஆன்மாவாக கொண்ட முற்றுமுழுதாக காதல் கதையாக அமையவுள்ள உணர்வுமிக்க படத்தை தயாரிக்கவுள்ளேன்.
தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான YM Movies மூலம்தயாரித்து இயக்கவுள்ள ‘99 Songs’ திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து வௌியிடவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
‘99 Songs’ திரைப்படம் உலகளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த வருடம் ஜூன் 21 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
ரசிகர்களாகிய நீங்கள் இதுவரை பொழிந்த அன்புக்கும், ஆதரவுக்கும், ஊக்கத்திற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்' எனவும் ஏ ஆர் ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.