தமிழ் சினிமாவில் காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, மெர்சல் உட்பட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மத்தியில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளவர் நடிகை நித்யா மேனன்.
இந்நிலையில் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் 'சைக்கோ' படத்தில் நடித்து முடித்திருக்கும் நித்யா மேனன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.
இதன்போது, தான் எதிர்பாராத விதமாக தான் சினிமா துறையில் நுழைந்தேன் எனவும் ஓரிரு ஆண்டுகள் நல்ல படங்களில் நடித்துவிட்டு போய் விடலாம் என நினைத்தேன். ஆனால், அடுத்தடுத்து தொடர்ந்து நடித்து வந்ததால் அதன் மீது விருப்பம் அதிகமாகிவிட்டது.
மேலும் சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிக மிக குறைவே. என்னிடம் சிலர் மிகவும் ஆபாசமாக பேசி தவறாக நடக்க முயற்சி செய்தனர்.
பின்னர் பெண்களிடம் கௌரவமாக நடந்துகொள்ளுங்கள் என நான் கூறினேன். நமக்கு எவ்வாறான கஷ்டம் வந்தாலும் கொஞ்சம் கூட பயப்படாமல் தைரியமாக முகத்தில் அறைந்த மாதிரி சொல்ல வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் 'சைக்கோ' படத்தில் நடித்து முடித்திருக்கும் நித்யா மேனன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.
இதன்போது, தான் எதிர்பாராத விதமாக தான் சினிமா துறையில் நுழைந்தேன் எனவும் ஓரிரு ஆண்டுகள் நல்ல படங்களில் நடித்துவிட்டு போய் விடலாம் என நினைத்தேன். ஆனால், அடுத்தடுத்து தொடர்ந்து நடித்து வந்ததால் அதன் மீது விருப்பம் அதிகமாகிவிட்டது.
மேலும் சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிக மிக குறைவே. என்னிடம் சிலர் மிகவும் ஆபாசமாக பேசி தவறாக நடக்க முயற்சி செய்தனர்.
பின்னர் பெண்களிடம் கௌரவமாக நடந்துகொள்ளுங்கள் என நான் கூறினேன். நமக்கு எவ்வாறான கஷ்டம் வந்தாலும் கொஞ்சம் கூட பயப்படாமல் தைரியமாக முகத்தில் அறைந்த மாதிரி சொல்ல வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என கூறியுள்ளார்.