சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த நடிகர் ஒருவர் கல்லூரி மாணவி ஒருவருக்கு பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த முறைப்பாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த சூரியகாந்த் என்ற திரைப்பட நடிகர் அதிமுகவில் பேச்சாளராகவும் உள்ளார். இவரது மகன் விஜய் ஹரிஸ் என்பவர் நடிகராக உள்ளார். இவர் தற்போது ‘நாங்களும் நல்லவங்க தான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் விஜய் ஹரிஸ் கல்லூரி மாணவி ஒருவருக்கு பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து அவரை பாலியல் வன்முறை செய்ததாக அவர் மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டையடுத்து மேற்படி திரைப்பட நடிகர் விஜய் ஹரிஸ்ஸை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கல்லூரி மாணவிக்கு மாதுளம் பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்முறை செய்ததை விஜய் ஹரிஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றம் உறுதியாகும் பட்சத்தில் அவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
திரைப்பட நடிகர் ஒருவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை சேர்ந்த சூரியகாந்த் என்ற திரைப்பட நடிகர் அதிமுகவில் பேச்சாளராகவும் உள்ளார். இவரது மகன் விஜய் ஹரிஸ் என்பவர் நடிகராக உள்ளார். இவர் தற்போது ‘நாங்களும் நல்லவங்க தான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் விஜய் ஹரிஸ் கல்லூரி மாணவி ஒருவருக்கு பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து அவரை பாலியல் வன்முறை செய்ததாக அவர் மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டையடுத்து மேற்படி திரைப்பட நடிகர் விஜய் ஹரிஸ்ஸை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கல்லூரி மாணவிக்கு மாதுளம் பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்முறை செய்ததை விஜய் ஹரிஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றம் உறுதியாகும் பட்சத்தில் அவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
திரைப்பட நடிகர் ஒருவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.