மகேந்திர சிங் டோனிக்கு அனந்தபூர் நீதிமன்றம் அழைப்பாணை

Tuesday, 06 October 2015 - 15:15

%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88
இந்திய ஒருநாள் மற்றும் 20 க்கு 20 கிரிக்கட் போட்டிகளுக்கான அணித்  தலைவர் மகேந்திர சிங் டோனிக்கு ஆந்திர பிரதேஷ் மாநிலத்தின் அனந்தபூர் மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

இந்து மதத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் செயற்பட்டதாக அவர் மீது விஸ்வ இந்து பர்ஷாத் அமைப்பு தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படையில் மீண்டும் இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அவர் விளம்பரம் ஒன்றிற்காக மகா விஷ்ணுவின் வேடமிட்டிருந்தமை தொடர்பிலேயே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி. டோனி எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.







Exclusive Clips