கோடை பருவக்காலத்துக்கான பிராக் ஓபன் டென்னிஸ் போட்டிகள் செக் குடியரசில் நடைப்பெற்றன.
இந்த போட்டியில் செக் குடியரசின், லூஸி சஃபரோவா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இந்தமுறை, பருவகால போட்டிகளில் அவர் வென்ற முதல் பட்டமாக இது அமைந்துள்ளது.
செக் குடியரசின் பிராக் நகரில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் செக் குடியரசின், லூஸி சஃபரோவா மற்றும் அவுஸ்திரேலியாவின், சமந்தா ஸ்டோசர் ஆகியோர் பங்குபற்றினர்.
இதில் சஃபரோவா 3 க்கு 6, 6க்கு 1, மற்றும் 6 க்கு 4 என்ற செட் கணக்கில் அவுஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசரை வீழ்த்தினார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 3க்கு 6 என்ற கணக்கில் சஃபரோவா இழந்தார்.
இரண்டாவது ஆட்டத்தில் சஃபரோவா 6க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இதனால் வெற்றியைத் தீர்மானிக்க, 3வது செட் ஆரம்பமானது.
சஃபரோவா அந்த செட்டை 6க்கு 4 என்ற கணக்கில் கைப்பற்றி போட்டியில் வெற்றிப்பெற்றார்.
இறுதியாக கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் தோஹா ஓபனில் சாம்பியன் பட்டத்தை இவர் வெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.