அவுஸ்திரேலியாவுடனான 20/20 தொடரை கைப்பற்றிய இலங்கை அணிக்கு உற்சாக வரவேற்பு (காணொளி இணைப்பு)

Friday, 24 February 2017 - 9:22

%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9+20%2F20+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%29
அவுஸ்திரேலியாவுடனான இருபதுக்கு இருபது தொடரை கைப்பற்றிய இலங்கை அணி இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்தது.

அவர்களை வரவேற்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன் போது , இந்த போட்டித் தொடரின் தொடராட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்ட அசேல குணரட்னவிற்கு விசேடமான வரவேற்பு கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வரவேற்பினை தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதில் அணியின் பயிற்சியாளர் கிரேம் பொர்ட் / முகாமையாளர் ரஞ்சித் பிரனாந்து போன்று அசேல குணரட்ன மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த அசேல , தென்னாபிரிக்கா சுற்றின் போதான அனுபவம் , அவுஸ்திரேலியா சுற்றில் தான் சிறந்து விளையாட வழிவகுத்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

விசேடமாக தென்னாபிரிக்கா பிட்ச் மற்றும் மைதான அமைப்பை போன்று அவுஸ்திரேலியாவிலும் காணப்பட்டதால் தனக்கு சிறப்பான துடுப்பாட்டத்தை வௌிப்படுத்த முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

சுமார் ஒருவருடத்திற்கு மேலாக போட்டிகளில் கலந்து கொள்ளாததால் , இன்னும்  பழைய பார்முக்கு வரவில்லை என நம்புவதாக இதன் போது கருத்து தெரிவித்த லசித் மாலிங்க தெரிவித்திருந்தார்.








Exclusive Clips