இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள வெற்றியாளர் கிண்ண போட்டித் தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் உமர் அக்மல் மற்றும் அஷார் அலி ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக அவுஸ்ரேலிய அணியுடனான ஒருநாள் தொடரை 4க்கு ஒன்று என்ற கணக்கில் இழந்த பாகிஸ்தான் அணியில் இவர்கள் இருவரும் இணைக்கப்பட்டிருக்க வில்லை.
அத்துடன், தற்போது இடம்பெற்று வரும் மேற்கிந்திய தீவுகளுடனான தொடரின் ஒருநாள் போட்டிகளிலும் அவர்கள் இடம்பெற்றிருக்க வில்லை.
இந்தநிலையில், ஜூன் மாதம் இங்கிலாந்தில் ஆரம்பமாக உள்ள வெற்றியாளர் கிண்ணத் தொடருக்கு இவர்கள் இருவரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இந்தியாவில் இடம்பெற்று வரும் 10வது இந்தியன் பிரிமியர் லீக் இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் 30 வது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இன்றைய போட்டியில் ரைசிங் பூனே சுப்பர்ஜெயிட் மற்றும் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.