இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று இடம்பெற்ற இரண்டு போட்டிகளில் கல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் வெற்றி பெற்றன.
நேற்று மாலை இடம்பெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கட்டுள்ளால் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி, 20 ஓவர் நிறைவில் 06 விக்கட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது.
இதையடுத்து, 161 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 16.2 ஓவர்கள் நிறைவில் 03 விக்கட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்று வெற்றி அடைந்தது.
இதேவேளை, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று இரவு இடம்பெற்ற போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 26 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 03 விக்கட்டுக்களை இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றது.
இதையடுத்து, 208 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் நிறைவில், 09 விக்கட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.