வெற்றியாளர் கிண்ணம் தொடர்பில் இலங்கை அணி தலைவர் வெளியிட்டுள்ள கருத்து..

Saturday, 27 May 2017 - 18:59

+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..
வெற்றி வாய்ப்பு குறைவான நிலையில் சர்வதேச கிரிக்கட் பேரவையின் வெற்றியாளர் கிண்ணத் தொடரில் போட்டியிடுவது குறித்து மகிழ்ச்சியடைவதாக இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தீவ்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி அண்மைக்காலமாக பின்தங்கல்களை சந்தித்துள்ளது என்பது உண்மை.

ஆனால் இலங்கையிலும், இலங்கிலாந்திலும் இறுதியாக பெற்ற பயிற்சிகளில் இலங்கையின் வீரர்கள் சிறந்த நிலைமை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

ஏனைய அணிகள் இந்த தொடரில் வாய்ப்புக் கூடிய அணிகளாக இருந்தாலும், தரப்படுகின்ற சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் அணியே வெற்றிப் பெறும்.

அந்த வகையில் இலங்கை அணியின் வீரர்கள் தொடர்பில் தமக்கு நம்பிக்கை இருக்கிறது.

இந்த தொடர் மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்று அஞ்சலோ மெத்தீவ்ஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.









Exclusive Clips