இலங்கை கிரிக்கட் அணிக்கான வீரர்களை தெரிவு செய்யும் போது, அவர்களின் உடற்தகுதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாடடுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கான சூத்திரம் ஒன்று தற்போது முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இது நடைமுறைக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் வீரர்கள் சிலர் இந்தியாவினால் நடத்தப்படுகின்ற ஐ.பி.எல். போட்டிகளுக்கு முன்னுரிமை வழங்கி வருவதாகவும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையில் உடற்தகுதி நிகழ்சிகளில் பங்குபற்றும் இவ்வாறான வீரர்கள், பணத்துக்காக இந்தியாவில் சென்று விளையாடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணொளி..
காணொளி..