இலங்கை கிரிக்கட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து க்ரஹம் போர்ட் விலகியுள்ளார்.
இதனை இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை உறுதிப்படுத்தியுள்ளது.
56 வயதுடைய க்ரஹம் போர்ட் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரராவார்.
கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை இலங்கை கிரிக்கட் அணிக்கு பயிற்றுவிப்பாளராக பணியாற்றினார்.
அதனை தொடர்ந்து பதவியில் இருந்து விலகி, மீண்டும் கடந்த வரும் பெப்பரவரி மாதத்தில் மீண்டும் இலங்கையில் தலைமை பயிற்று விப்பாளராக பதவியேற்று கொண்டமை குறிப்பிடத்தக்கது.