சர்வதேச கிரிக்கெட் போட்டியின் விதிமுறைகளில் சில மாற்றங்களைக் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கால்பந்து போட்டியில் மைதானத்திற்குள் வீரர்கள் ஒழுங்கீனமாக நடந்துக்கொண்டால் மஞ்சள் அல்லது சிவப்பு அட்டையைக் காட்டி வீரர்களை வெளியேற்றும் முறையானது கிரிக்கெட் போட்டிகளுக்கும் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய விதிமுறை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் இருந்து அமுலுக்கு வரும் என சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இந்த விதிமுறையை சர்வதேச கிரிக்கெட்டிலும் அமுல்படுத்த வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் நிறுவனம் பரிந்துரைத்திருந்த நிலையில், அதற்கு ஐ.சி.சியின் தலைமை நிர்வாகக்குழு நீண்ட விவாதத்திற்கு பின்னர் இணக்கம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.