டெஸ்ட் போட்டிகளில் பெற்றுக்கொண்ட தோல்விப் பாடங்களை கொண்டு ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடவுள்ளதாக இலங்கை அணியின் ஒருநாள் அணித்தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெறும் ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகள் தொடர்பில் இன்று கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.
மேலும் , டெஸ்ட் போட்டிகளில் தரங்க ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய நிலையில் , ஒருநாள் போட்டிகளில் அவர் நடுநிலை வீரராக களமிறங்கவுள்ளதாக இந்த ஊடக சந்திப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை , உபாதை காரணமாக பந்து வீச்சில் இருந்து விலகியிருந்த ஏஞ்சலோ மெத்திவ்ஸ் இந்த போட்டித் தொடரில் பந்து வீச வாய்ப்புள்ளதாக அணித்தலைவர் உபுல் தரங்க இந்த ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
மேலும் , லசித் மாலிங்க போன்ற வீரர்கள் அணியில் இருப்பது அணிக்கு மேலும் வலிமையைத் சேர்க்கும் என தரங்க இதன் போது குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை அணி மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெறும் ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகள் தொடர்பில் இன்று கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.
மேலும் , டெஸ்ட் போட்டிகளில் தரங்க ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய நிலையில் , ஒருநாள் போட்டிகளில் அவர் நடுநிலை வீரராக களமிறங்கவுள்ளதாக இந்த ஊடக சந்திப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை , உபாதை காரணமாக பந்து வீச்சில் இருந்து விலகியிருந்த ஏஞ்சலோ மெத்திவ்ஸ் இந்த போட்டித் தொடரில் பந்து வீச வாய்ப்புள்ளதாக அணித்தலைவர் உபுல் தரங்க இந்த ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
மேலும் , லசித் மாலிங்க போன்ற வீரர்கள் அணியில் இருப்பது அணிக்கு மேலும் வலிமையைத் சேர்க்கும் என தரங்க இதன் போது குறிப்பிட்டிருந்தார்.