இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 209 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து பேமிங்ஹாம் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 8 விக்கட்டுக்களை இழந்து 514 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி தமது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 168 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இதனையடுத்து பொலோ ஒன் முறையில் தமது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 137 ஓட்டங்களை பெற்று, இன்னிங்ஸ் தோல்வியை அடைந்தது.
இதேவேளை, இந்திய இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது சர்வதேச ஒரு நாள் போட்டி தம்புள்ளை ரங்கிரி விளையாட்டுத் திடலில் இன்று பகல் இரவு ஆட்டமாக இடம்பெறவுள்ளது.