இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி நாளையதினம் நடைபெறவுள்ளது.
நாளையப் போட்டியில் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க இலங்கை அணி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா கிரிக்கட் முகாமையாளர் அசங்க குருசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 2 வேகப்பந்து வீச்சாளர்கள், 2 சுழற்பந்து வீச்சாளர் மற்றும் இரண்டு சகலத்துறை வீரர்களுடன் களமிறங்கியது.
எனினும் சிக்கார்தவான் மற்றும் விராட் கோலி ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தை, பந்துவீச்சுக் குழாமினால் சமாளிக்க முடியாதிருந்தது.
இந்த நிலையில் நாளையதினம் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக துஸ்மந்த சமீர இணைக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.