டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கட் லீக் போட்டிகளை நடத்த சர்வதேக கிரிக்கட் பேரவை (ICC) ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லியில் இன்று இடம்பெற்ற சர்வதேச கிரிக்கட் பேரவையின் (ICC) ஆலோசனை கூட்டத்தின் போது இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஐசிசியினால் நடத்தப்படும் கிரிக்கட் தொடர்களில் புதிதாக இரண்டு தொடர்கள் இணைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே வெற்றியாளர் கிண்ணம் மற்றும் 20 ஓவர் உலகக்கோப்பை என சர்வதேச கிரிக்கட் பேரவை பல்வேறு தொடர்களை நடத்தி வருகிறது.
அந்த வரிசையில் தற்போது, புதிதாக இரண்டு சர்வதேச கிரிக்கட் தொடர்களை நடத்த திட்டமிட்டுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் லீக் ஆகிய இரண்டு தொடர்களும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
டெஸ்ட் லீக் தொடரில் 9 அணிகளும், ஒருநாள் லீக் தொடரில் 13 அணிகளும் விளையாடும்படி திட்டமிடப்பட்டுள்ளது.
டெஸ்ட் லீக் தொடர் 2019-ம் ஆண்டிலிருந்தும், ஒருநாள் லீக் தொடர் 2020-ம் ஆண்டிலிருந்தும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டெஸ்ட் லீக்கில் ஒவ்வொரு அணியும் 6 டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும். குறிப்பாக, சொந்த மண்ணில் 3 தொடர்களும், அந்நிய மண்ணில் 3 தொடர்களிலும் விளையாட வேண்டும். டெஸ்ட் லீக்கில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் 2021-ல் இங்கிலாந்தில் நடைபெறும் இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.
இதேபோல், ஒருநாள் லீக் தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 8 தொடர்களில் விளையாட வேண்டும். இந்த லீக்கில் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 3 ஒருநாள் தொடர்களில் பங்கேற்றிருக்க வேண்டும்.
இதன் புள்ளிகளின் அடிப்படையில் 2023-24ம் ஆண்டுக்கான உலக கிண்ணத் தொடருக்கான அணிகள் தெரிவு செய்யப்படும்.
பரீட்சார்த்த முறையில் 4 நாள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், பகலிரவு டெஸ்ட் தொடர் நடத்தவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதன்மூலம் சர்வதேச கிரிக்கட் வளர்ச்சி மேம்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் இன்று இடம்பெற்ற சர்வதேச கிரிக்கட் பேரவையின் (ICC) ஆலோசனை கூட்டத்தின் போது இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஐசிசியினால் நடத்தப்படும் கிரிக்கட் தொடர்களில் புதிதாக இரண்டு தொடர்கள் இணைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே வெற்றியாளர் கிண்ணம் மற்றும் 20 ஓவர் உலகக்கோப்பை என சர்வதேச கிரிக்கட் பேரவை பல்வேறு தொடர்களை நடத்தி வருகிறது.
அந்த வரிசையில் தற்போது, புதிதாக இரண்டு சர்வதேச கிரிக்கட் தொடர்களை நடத்த திட்டமிட்டுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் லீக் ஆகிய இரண்டு தொடர்களும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
டெஸ்ட் லீக் தொடரில் 9 அணிகளும், ஒருநாள் லீக் தொடரில் 13 அணிகளும் விளையாடும்படி திட்டமிடப்பட்டுள்ளது.
டெஸ்ட் லீக் தொடர் 2019-ம் ஆண்டிலிருந்தும், ஒருநாள் லீக் தொடர் 2020-ம் ஆண்டிலிருந்தும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டெஸ்ட் லீக்கில் ஒவ்வொரு அணியும் 6 டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும். குறிப்பாக, சொந்த மண்ணில் 3 தொடர்களும், அந்நிய மண்ணில் 3 தொடர்களிலும் விளையாட வேண்டும். டெஸ்ட் லீக்கில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் 2021-ல் இங்கிலாந்தில் நடைபெறும் இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.
இதேபோல், ஒருநாள் லீக் தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 8 தொடர்களில் விளையாட வேண்டும். இந்த லீக்கில் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 3 ஒருநாள் தொடர்களில் பங்கேற்றிருக்க வேண்டும்.
இதன் புள்ளிகளின் அடிப்படையில் 2023-24ம் ஆண்டுக்கான உலக கிண்ணத் தொடருக்கான அணிகள் தெரிவு செய்யப்படும்.
பரீட்சார்த்த முறையில் 4 நாள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், பகலிரவு டெஸ்ட் தொடர் நடத்தவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதன்மூலம் சர்வதேச கிரிக்கட் வளர்ச்சி மேம்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.